×

கணவனுடன் சேர்ந்து வாழாத பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுப்பு: சித்தப்பா கைது

பெரம்பூர்: திருவிக நகர் தீட்டித்தோட்டம் 5வது தெருவை சேர்ந்தவர் அசத்துல்லா(25). இவரது மனைவி அபரின் சுல்தானா(19). இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அபரின் சுல்தானா தொடர்ந்து தனது கணவனுடன் சேர்ந்து வாழாமல்  அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அபரின் சுல்தானாவின் சித்தப்பாவான புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்த சையது ஜலால்(41) என்பவர் நேற்று அபரின் சுல்தானாவின் வீட்டிற்கு சென்று இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது சையத் ஜலாலுக்கும், அபரின் சுல்தானாவுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜலால் தான்  வைத்திருந்த பிளேடால் அபரின் சுல்தானாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த சுல்தானாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் திருவிக நகர் போலீசார் சையத் ஜலாலை  கைது செய்தனர்.

Tags : Chittappa , Woman, Chittappa, arrested
× RELATED நிலப்பிரச்னையில் இளம்பெண் குத்திக்கொலை: சித்தப்பா கைது